search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தமிழகம்"

    • இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
    • மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம், என்ற பிரச்சார புத்தகத்தை வெளியிட்டு, தமிழகத்தில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

    டாஸ்மாக் வேண்டாம் என தி.மு.க. பல்வேறு போராட்டங்கள் நடத்தியது 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை வந்தவுடன் டாஸ் மாக் மதுவிலக்கை அமல் படுத்தவில்லை. டாஸ்மாக் கால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.

    தமிழ கத்தில் தி.மு.க.வினர் நடத்த கூடிய அனைத்து மதுபான ஆலைகளையும் மூட வேண் டும். ஆட்சிக்கு வந்து பல மாதங்களாகியும் டாஸ்மாக்கை மூடவில்லை.

    டாஸ்மாக்கில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதால் இன்று செந்தில் பாலாஜி சிறை யில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அடுத்த அமைச்சரும் காலை ஏழு மணி முதல் மதுபான கடை திறப்போம் என்றும், மது குடிப்பவர்களை யாரும் குடிகாரர் என்று கூறக் கூடாது என்று கூறி வரு கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மதுவால் இளைஞர்கள் சீரழிக் கப்பட்டு வருகின்றனர்.டாஸ்மாக்கில் மது குடித்தால் குடல் புண் நோய் தான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 200-க்கும் மேற் பட்ட வியாதிகள் வரும் என்று டாக்டராகிய நான் பரிசோதித்து கூறுகிறேன்.

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதிய தமிழக கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பாட்டில் உடைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

    ஆகையால் தமிழகத்தில் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இணை செய லாளர் மலைச்செல்வம் மற்றும் துணைச் செயலா ளர்கள் முத்துக்கூரி, மகேஷ் குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பேரன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஜூன் 15-ந் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடை பெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தலா 5 வாகனங்கள் வீதம் நிர்வாகிகள் தொண்டர்கள், திரண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஒடிசா மாநி லத்தில் நடந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி (ராமநாதபுரம்), சேகர் (திருப்புல்லாணி), சுடர் (மண்டபம்), லாசர் (கடலாடி ஒன்றிய செயலாளர்), பெரியசாமி (முதுகுளத்தூர்), ராஜா (நயினார்கோவில்), பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்

    • புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் மலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அற்புதராஜ், ஆர்.கே.முனி யசாமி, முத்துக்கூரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முனியசாமி அனைவரையும் வர வேற்றார். பூரண மது விலக்கை வலியுறுத்தியும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்ட பலி யான சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ஒன்றிய செயலா ளர்கள் முனியசாமி, சேகர், சுரேஷ், பேரின்பராஜ், விலாசி, பெரியசாமி மற்றும் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செய லாளர் வி.கே.ஐயர், மாநில துணைப்பொதுச்செய லாளர்கள், சுப்பிரமணியன், தேனி பாலசுந்தரராஜ், நெல்லை சிவக்குமார், கிருபைராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    மாவட்ட துணை செய லாளர் மருதன்வாழ்வு ரவி, மாவட்ட துணை செயலாளர் ஆழ்வை பொன் அமிர்தம், குருவை சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் மாபெரும் இயக்கமாக நமது புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமநீதிக்காக போராடி உயிர் நீத்த சமநீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-வது வீர வணக்க புகழஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்தாண்டிற்கான வீரவணக்க புகழஞ்சலி, வீரவணக்க பேரணி நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    வீரவணக்க புகழஞ்சலி நிகழ்விற்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50 வாகனம் என குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முக நாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • நாளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய தமிழகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    நாளை (சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் திரளாக சென்று பங்கேற்றிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து சிறப்பித்திட வேண்டும்.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புதிய தமிழகம் தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் அணி திரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×